தூத்துக்குடி, செப்.29: தூத்துக்குடியில் திரவ இரிடியம் என்ற பெயரில் பறிமுதல் செய்யப்பட்ட பொருள் பரிசோதனைக்காக சென்னை ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி ஆரோக்கியபுரம் ராஜபாளையத்தை சேர்ந்த மரியதாஸ்(49). இவரது நண்பர் கதிர்வேல்நகரை சேர்ந்த மாரியப்பன் மகன் முருகன்(47) ஆகியோர் உதவியுடன், சிவகங்கை மாவட்டம் கண்டனூரை சேர்ந்த முதியவர் வைத்தியலிங்கம்(60), முதுகுளத்தூர் புளியங்குடியை சேர்ந்த அமமுக ஒன்றிய செயலாளர் கருப்பணன் மகன் முத்துராமலிங்கம்(45) ஆகியோர் திரவ இரிடியம் என்று கூறி ஒரு பொருளை விற்க முயன்றுள்ளனர்.