கந்தர்வகோட்டை, மார்ச் 18: கந்தர்வகோட்டை அருகே கோமாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் சார்பில் மாநிலத்திலிருந்து ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உடன் இணைந்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு தகவல் அனுப்பும் பொருட்டு ஆய்வுக்கு வந்திருந்தனர். வருகை தந்த சென்னை ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை மாநில ஒருங்கிணைப்பாளா; பாலமுருகன், பள்ளி மேலாண்மைக்குழு மாநில ஒருங்கிணைப்பாளர் சசிகுமார் உள்ளிட்ட அனைவரையும் தலைமையாசிரியர் செந்தில்முருகன் வரவேற்றார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அண்ணாத்துரை மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் அன்பு மற்றும் பெற்றோர்கள் திட்ட குழுவினருக்கு ஆய்வுக்கு துணை புரிந்தனர். கோமாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகத்தின் செயல்பாடுகளையும், மாணவர்கள் இணையத்தின் வழியாக நாட்டமறித்தேர்வு எப்படி எழுதுகிறார்கள் என்பதையும் படம் பிடித்தனர். பள்ளியில் செயல்பட்டு கொண்டிருக்கக் கூடிய இளைஞர் மற்றும் சுற்றுசூழல் சார் மன்றத்தின் சார்பில் கொரோனா ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி சிறப்பாக நடைப்பெற்றது.