வேதாரண்யம், மார்ச் 18: வேதாரண்யம் நகராட்சி பகுதியில் நோய் தடுப்பு கிருமி நாசினி தெளிப்பு பணி நடந்தது. வேதாரண்யம் நகராட்சியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வேதாரண்யம் நகராட்சி ஆணையர் பிரதான்பாபு, மேலாளர் மன்சூர், மற்றும் சுகாதார பணியாளர்கள் மேற்கொண்டனர். நகராட்சி அலுவலகத்தில் துப்பரவு பணியாளர்கள் எவ்வாறு பாதுகாப்பாக பணி செய்ய வேண்டும் என்பது குறித்து ஆணையர் பிரதான்பாபு அறிவுறுத்தினார்.