திருவில்லிபுத்தூர் சிறையில் கைதிகளை சந்திக்க 2 வாரம் தடை கொரோனா பீதி எதிரொலி

திருவில்லிபுத்தூர், மார்ச் 18: கொரோனா எதிரொலியாக திருவில்லிபுத்தூர் சிறையில் உள்ள கைதிகளை பார்க்க 2 வாரம் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. அரசு அலுவலகங்களுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதனிடையே தமிழகம் முழுவதும் சிறைகளில் உள்ள கைதிகளை சந்திக்க பார்வையாளர்களுக்கு 2 வாரம் தடை விதித்து, தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது. இதன்படி விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் உள்ள கிளை சிறைச்சாலையில், நேற்றில் இருந்து கைதிகளை சந்திக்க பொதுமக்கள், வழக்கறிஞர்கள், அமைப்புசாரா தொண்டு நிறுவனங்களுக்கு இரண்டு வாரம் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு சிறைச்சாலையின் நுழைவு வாயில் கதவில் ஒட்டப்பட்டுள்ளது.

Related Stories: