கீழக்கரை, மார்ச் 18: கீழக்கரை பகுதி கடற்கரை பகுதிகளில் பல நாட்களாக ஜெல்லி மீன்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், கடலுக்குள் செல்லும் மீனவர்கள் கவனமாக செல்ல வனத்துறை அதிகாரி சிக்கந்தர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறுகையில், ‘‘ஜெல்லி மீன்கள் என்பது கடல் ஆமை உண்ணக் கூடிய உணவாகும். கடந்த காலங்களில் அதிக ஆமைகள் கடற்கரையில் இருந்து வந்தன. இந்த சூழலில் தற்போது மீனவர்கள் ஆமைகளை வேட்டையாடுவதும் மீன்பிடிக்க செல்லும் பொழுது வலையில் மாட்டிக்கொண்டு ஆமைகளை பக்குவமாக எடுத்து கடலுக்குள் விடாமல் மீன் வலைகளை பாதுகாக்கும் எண்ணத்தில் அதனை ‘வெட்டுவதாலும் ஆமை இனங்கள் அழிந்து வருகின்றன.