மக்கள் குறைதீர் கூட்டத்தில் 325 மனுக்கள் வழங்கிய பொதுமக்கள்

ராமநாதபுரம், மார்ச் 28: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பாக 325 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒரு மாத காலத்திற்குள் மனுதாரர்களுக்கு உரிய தீர்வு வழங்கிட வேண்டும் எனவும், தீர்வு வழங்க முடியாத மனுக்கள் நிலை குறித்து மனுதாரர்களிடம் அலுவலர்கள் எடுத்துரைக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறைசார்ந்த அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டுமென கலெக்டர் ஜானி டாம் வர்கிஸ் தெரிவித்தார்.மேலும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ், மின்சாரம் தாக்கி உயிரிழந்தமைக்காக வரப்பெற்ற நிவாரணத் தொகை ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையினை வாரிசுதாரிடம் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்(பொ) ராஜசேகரன், தனித்துணை ஆட்சியர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: