தூத்துக்குடி, மார்ச் 18: தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு கூடுதலாக ரயில்கள் இயக்க வேண்டும் என ரயில்வே வாரியத் தலைவரிடம் திமுக மகளிர் அணி செயலாளரான கனிமொழி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக மத்திய ரயில்வே வாரியத் தலைவர் வினோத் குமார் யாதவை நேரில் சந்தித்து அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: பாலக்காட்டில் இருந்து நெல்லை வரை இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும். இதே போல் மும்பையில் இருந்து மதுரை வரை இயக்கப்படும் லோக் மான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும். தூத்துக்குடி-சென்னை இடையே முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் மட்டுமே இயக்கப்படுகிறது. தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக கூடுதல் பயணிகள் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.