திண்டுக்கல், மார்ச் 18: சிறுமலைப்பகுதியில் விளையும் காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்காததால், தற்காலிக மார்க்கெட் துவங்கி விவசாயிகள் காய்கறி விற்பனையை துவக்கி உள்ளனர். தங்களுக்கு நிரந்தர மார்க்கெட் அமைக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர். திண்டுக்கல் அருகே சிறுமலை வனப்பகுதியில் பலா, வாழை, எலுமிச்சை, காப்பி, ஆரஞ்சு, மிளகு, அவக்கோடா உள்ளிட்ட பொருள்கள் விளைகின்றன.