தொண்டி, மார்ச் 17: கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனா உட்பட பல்வேறு நாடுகளில் அதிகளவில் உயிர் பலி ஏற்பட்டுள்ளது, தமிழகத்தில் இப்பாதிப்பு அதிகம் இல்லை என அரசு அறிவித்துள்ள நிலையில், நேற்றிலிருந்து வரும் 31ம் தேதி வரை எல்கேஜி மற்றும் யூகேஜி உட்பட 5ம் வகுப்பு வரையிலும் தொடக்க நிலை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளனர். இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் கடும் அச்சம்
எழுந்துள்ளது. கொரோனா பாதிப்பு இல்லை என்றால் ஏன் விடுமுறை விட வேண்டும் என்ற அச்சம் எழுந்துள்ளது. அரசு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்து கொள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.