பள்ளி ஆண்டு விழா

பரமக்குடி, மார்ச் 17:பரமக்குடியில் யாதவா மெட்ரிக் பள்ளியில் 24வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது, தலைவர் ராமு தலைமை வகித்தார். தாளாளர் துரைச்சாமி வரவேற்றார். விழாவில் பரமக்குடி டிஎஸ்பி சங்கர் ,காவல் ஆய்வாளர் சுதந்திராதேவி  ஆகியோர் கலந்துகொண்டு  கல்வியில் சிறந்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினார்கள்.  

சட்ட ஆலோசகர் ராஜேந்திரன், ராமு ஆகியோர் சிறப்புரையாற்றினர். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு சங்க துணை தலைவர் வெள்ளைச்சாமி, கனகராஜ் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை முதல்வர் சீனிவாச ராகவன் மற்றும் ஆசிரிய,ஆசிரியைகள் செய்திருந்தனர். இறுதியில் சங்க பொருளாளர் ராசு நன்றி கூறினார். மேலும் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: