ராமநாதபுரம், மார்ச் 17: ராமநாதபுரத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் தலைவர் அப்துல்மாலிக், செயலாளர் நாகரெத்தினம், பொருளாளர் சசிகலா லிங்கம் முன்னிலையில் நடைபெற்றது. இதில் ஊராட்சியில் நடைபெறும் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் இதர அதிகாரிகள் ஒத்துழைப்புடன் இணைந்து செயல்பட்டு மக்களுக்கு சென்றடைய வேண்டும். எதிர்வரும் கோடை காலங்களில் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையினை தீர்க்க அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களும் உரிய நேரத்தில் குடிநீர் கிடைக்க செயல்பட வேண்டும்.