சிதம்பரம், மார்ச் 17: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி சார்பில் கடலூர் மத்திய மாவட்டத்தில் உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கும், களம் கண்டவர்களுக்கும் பாராட்டு விழா சிதம்பரத்தில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா பங்கேற்று பாராட்டி பேசினார். பின்னர் அவர் கூறியதாவது: அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளது அந்த அடிப்படையில் தலைவர் ஜிகே வாசனுக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்கப்பட்டுள்ளது.