கடலூர், மார்ச் 17: கடலூரில் கொரோனா எச்சரிக்கை காரணமாக விளையாட்டு மைதானத்தை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாவட்ட எல்லைக்குள் நுழையும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுவது நேற்று முதல் துவங்கியுள்ளது. இந்நிலையில், கடலூரிலுள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவிருந்த அரசுப்பணியாளர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தேதி அறிவிக்கப்படாமல், ஒத்தி வைக்கப்படுவதாக ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.