திருவில்லிபுத்தூர், மார்ச் 13: திருவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா முன்னிட்டு நேற்று கொடியேற்றம் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் திருவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அந்த வகையில் இந்தாண்டு பூக்குழி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.இதற்காக கொடி பட்டத்திற்கு மேளதாளங்கள் முழங்க திருவில்லிபுத்தூர் நகரில் முக்கிய வீதிகளான தெற்கு ரதவீதி, வடக்கு ரதவீதி, மேல ரதவீதி, கீழரத வீதி என பல்வேறு வீதிகளில் கொண்டு வரப்பட்டு பின்னர் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது.இதனைத் தொடர்ந்து கோயிலில் காலை கொடி மரத்திற்கும் கொடி பட்டத்திற்கும் சிறப்பு பூஜைகள் தீப ஆராதனைகளும் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து 8.40 மணிக்கு கூடியிருந்த பக்தர்கள் குலவையிட மேளதாளம் முழங்க கோலாகலமாக கொடியேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருவில்லிபுத்தூர் நகரைச் சேரந்தஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.