கந்தர்வகோட்டை, மார்ச் 13: கந்தர்வகோட்டை அடுத்த ஆதனக்கோட்டை அருகே பெருங்களூரில் சாலை விபத்தில் ஒருவர் கால்முறிந்து படுகாயமடைந்தார். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை மருத்துவர்நகரை சேர்ந்தவர் இணக்கன் மகன் சுப்ரமணியன் (60). இவர் வேலை நிமித்தமாக பெருங்களூர் நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது பெட்ரோல் போடுவதற்காக திரும்பியுள்ளார்.