கங்கைகொண்ட சோழபுரத்தில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

ஜெயங்கொண்டம், மார்ச் 13: ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரம் கணக்க விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் கணக்க விநாயகருக்கு திரவியப்பொடி, மாவுப்பொடி, மஞ்சள், சந்தனம், பால், தேன் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. உட்கோட்டை, குருவாலப்பர்கோயில், சுண்ணாம்புகுழி, சம்போடை, குறுக்கு ரோடு, பள்ளிவிடை, பாகல்மேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: