கொள்ளிடம், மார்ச்11: வேளாண் பொறியியல் துறை சார்பில் பாரபட்சமாகவும், மறைமுகமாகவும் கைதெளிப்பான் வழங்கப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நாகை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் சில விவசாயிகளுக்கு மட்டும் மறைமுகமாகவும், பாரபட்சமாகவும் ரகசியமாகவும் கொள்ளிடம் பகுதியில் உள்ள சில விவசாயிகளுக்கு மட்டும் வேளாண் பொறியியல் துறை சார்பில் இலவசமாக கைதெளிப்பான் வழங்கப்பட்டுள்ளது. வேளாண் பொறியியல் துறை சார்பில் விவசாயிகளுக்கு எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல் ஆளும் அரசியல் கட்சி சார்பில், பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு பாரபட்சமாகவும், மறைமுகமாகவும் வேண்டப்பட்ட சிலருக்கு மட்டும் பயிரில் பூச்சி மருந்து தெளிக்கப் பயன்படுத்தப்படும் இலவச கைத்தெளிப்பான்கள் வழங்கப்பட்டுள்ளது. வேளாண்துறை சார்பில் மானிய விலையில் விவசாயிகளுக்கு டீசல் இஞ்சின் மின்மோட்டார் உள்ளிட்ட விவசாய உபகரணங்கள் அரசு சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.