கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யாமல் துர்நாற்றத்தால் மக்கள் அவதி

காளையார்கோவில், மார்ச் 11: காளையார்கோவிலை சுற்றியுள்ள 43 பஞ்சாயத்துக்கு தலைமையிடமாக காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளது. அலுவலகத்திற்கு செல்லும் சிமெண்ட் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மேலும் சாலையின் ஓரமாக உள்ள கழிவுநீர் வடிகால் வாய்க்கால் சுத்தம் செய்யப்படாமல் புதர்மண்டி துர்நாற்றம் வீசுகின்றது. அப்பகுதியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கால்நடை மருத்துவமனை, 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அதிகாரிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சாலையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றார்கள். மேலும் இரவு நேரங்களில் விஷப்பூச்சிகள் அதிகளவில் நடமாடுகின்றது. எனவே வாய்க்காலை உடனே சுத்தம் செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: