சந்தோஷி கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்

மதுராந்தகம், மார்ச் 10: மதுராந்தகம் அடுத்த பையம்பாடியில் இயங்கும்  சந்தோஷி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்புகளை உறுதி செய்யும் வகையிலான கேம்பஸ் இன்டர்வியூ நேற்று நடந்தது. இதில், சென்னை உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த  4 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டன. முகாமில், கல்லூரியில் இறுதி+யாண்டு படிக்கும் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். அதில், 300 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இந்த பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் சண்முகம், மேலாளர் குருநாதன், தனியார் நிறுவன நிர்வாகிகள் நாகராஜன், பாஷா, முத்துகிருஷ்ணன், மோகன், ராஜகுமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: