பூந்தமல்லி, மார்ச் 10 : மதுரவாயலில் வாலிபர் தலையில் கல்லைப் போட்டு படுகொலை செய்துள்ளனர். சென்னை மதுரவாயல், பாலகுமார் நகரில் உள்ள காலி மைதானத்தில் வாலிபரின் சடலம் கிடப்பதாக நேற்று மதுரவாயல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். முகம் சிதைந்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் தீவிர விசாரணையில், சடலமாக கிடந்தவர் மதுரவாயல் அருகே ஆலப்பாக்கம், பாரதியார் குறுக்கு தெருவை சேர்ந்த முனியசாமி (28), இறைச்சி கடையில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.