நன்னடத்தை விதிமீறிய ரவுடிக்கு 323 நாள் சிறை

சென்னை, மார்ச் 10: புதுவண்ணாரப்பேட்டை வஉசி நகர் செல்லியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (எ) சூலை விக்கி (27). ரவுடியான இவர் மீது அடிதடி வழிப்பறி திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த ஜனவரி 28ம் தேதி வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி முன் ஆஜரான விக்னேஷ், அடுத்த ஒரு வருடத்திற்கு குற்றச் சம்பவங்களில் ஈடுபட மாட்டேன் என நன்னடத்தை விதியின்படி உதிமொழி பத்திரம் எழுதி கொடுத்து சென்றார்.

ஆனால் அதை மீறி கடந்த 1ம் தேதி குற்ற செயலில் ஈடுபட்டதால் புதுவண்ணாரப்பேட்டை போலீசார் விக்கியை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். அதைத்தொடர்ந்து நன்னடத்தை விதியை மீறி செயல்பட்டதால் சிறையிலிருந்து அழைத்துவந்து வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் முன் நேற்று ஆஜர் படுத்தினர். அப்போது துணை ஆணையர் 323 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: