எப்போதும் பூட்டியே கிடப்பதால் விஏஓ.வை தேடி அலையும் பொதுமக்கள்

சாயல்குடி, மார்ச் 6: திருவரங்கத்தில் பயன்பாடின்றி வி.ஏ.ஓ அலுவலகம் பூட்டியே கிடப்பதால் வி.ஏ.ஓவை தேடி பொதுமக்கள் அலைந்து வருவதாக புகார் கூறுகின்றனர். முதுகுளத்தூர் தாலுகா, திருவரங்கம் தனி வருவாய் கிராமமாக உள்ளது. இதன் அருகே 5க்கும் மேற்பட்ட கிராம மக்களின் பயன்பாட்டிற்காக திருவரங்கத்தில் கிராம நிர்வாக அலுவலர் கட்டிடம் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. கட்டிடம் கட்டியதிலிருந்து அலுவலகத்திற்கு சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ. தலையாரி என வருவாய் துறையினர் யாரும் வருவது கிடையாது. வசதிக்காக முதுகுளத்தூரில் தனியார் கட்டிடங்களில் வாடகைக்கு இருந்து வருகின்றனர்.

Related Stories: