மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

பரமக்குடி, மார்ச் 6: பரமக்குடியில் அனைத்து மத்திய தொழிற்சங்கத்தின் சார்பாக மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. பரமக்குடியில் மத்திய அரசின் பட்ஜெட் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாகவும், தொழிலாளர்கள் மற்றும் மக்களுக்கும் எதிராக உள்ளதாக அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு நிர்வாகி அண்ணாதுரை, ஏஐடியுசி ராதா, எல்பிஎப் வின்சென்ட் அமுல்ராஜ், கண்ணன் ஆகியோர் தலைமையில் தொழிற்சங்கத்தினர் மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

Related Stories: