சாயல்குடி, மார்ச் 6: முதுகுளத்தூர் யூனியன் அலுவலக பழைய கட்டிடம் சேதமடைந்து கிடப்பதால், விபத்து ஏற்படும் முன்பு அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். முதுகுளத்தூர் யூனியன் அலுவலகத்திற்கு ஒன்றியத்திலுள்ள 48 பஞ்சாயத்துகளை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு பணிகளுக்காக அலுவலக வேலை நாட்களில் வந்து செல்கின்றனர். வளாகத்திலுள்ள சார்நிலை கருவூலம், குழந்தை நல அலுவலகம், உதவி செயற்பொறியாளர் அலுவலகம் போன்றவற்றிற்கும், யூனியன் அலுவலகத்திற்கும் அலுவலர்கள், ஊழியர்கள் வந்து செல்கின்றனர். தற்போது பஞ்சாயத்து தலைவர்கள், உதவி தலைவர்கள், கவுன்சிலர்கள், ஊராட்சி செயலர்கள் பல்வேறு பணிகளுக்காக வந்து செல்கின்றனர்.