குன்னூர், மார்ச் 6: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதால் குன்னூருக்கு வரும் சுற்றுலா பயணிகள் முக கவசம் அணிந்தபடியே பயணிக்கின்றனர். இந்தியாவில் கடந்த 3 நாட்களில் 29 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அறிவித்ததை தொடர்ந்து நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய விமானங்கள் அனைத்தும் இந்திய விமான நிலையங்களில் பலத்த மருத்து சோதனை பிறகே பயணிகள் அனுமதிக்கப்படுகிறது.