திருச்சி, மார்ச் 5: மாவட்ட அளவிலான வளைகோல்பந்து லீக் போட்டிகள் வரும் 7ம் தேதி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் பங்கேற்கும் கிளப், தனியார், பொது நிறுவன அணி வீரர்கள் திருச்சி மாவட்டத்தை சார்ந்தவர்களாக இருக்கவேண்டும். அணியின் குருப் போட்டோ கொண்டு வருதல் வேண்டும். முதல் போட்டியின்போது தங்கள் அணியின் 16 வீரர்கள் பெயர்களை கட்டாயம் பதிவு செய்துகொள்ள வேண்டும். போட்டியில் சீருடை நம்பருடன் கலந்துகொள்ள வேண்டும். நுழைவு விண்ணப்பத்தில் வீரர்கள் படிக்கும் பள்ளி, கல்லூரி, கிளப் முகவரி மற்றும் வீட்டு முகவரியுடன் அனுப்ப வேண்டும். போட்டியில் கலந்துகொள்ளும் அணியினை நிறுத்தவோ, நீக்கவோ நிர்வாக கமிட்டியின் அதிகாரத்திற்கு உட்பட்டது. வெற்றி பெறும் அணி மண்டல அளவிலான வளைகோல்பந்து போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெறுவர்.