நாகர்கோவில், மார்ச் 5: குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:குமரி மாவட்டத்தில் தக்கலை ஷேக் பீர்முகம்மது சாகிப் ஒலியுல்லாஹ் (ராலி) ஆண்டு விழாவை முன்னிட்டு மார்ச் 9ம் தேதி (திங்கள்கிழமை) உள்ளூர் விடுமுறை மற்றும் மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோயில் மாசிக்கொடைவிழாவை முன்னிட்டு மார்ச் 10ம் தேதி செவ்வாய்கிழமை அன்று குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது. மார்ச் 9ம் தேதி அன்று அறிவிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக மே மாதம் இரண்டாவது சனிக்கிழமையான மே 9ம் தேதி அன்று குமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும்.