தேனி, மார்ச் 4: தேனி அருகே, அன்னஞ்சியில் உள்ள முஸ்லீம் பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் மின்வாரியத்துறையினர் அத்துமீறி டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என சம்பந்தமாக முஸ்லீம் ஜமாத்தினர் அல்லிநகரம் போலீசில் புகார் அளித்தனர். தேனியில் இருந்து பெரியகுளம் செல்லும் சாலையில் அன்னஞ்சி முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு சொந்தமாக தேசிய நெடுஞ்சாலைக்கு ஒதுக்கியது போக 57 சென்ட் நிலம் உள்ளது. இந்த இடத்தில் நேற்று மின்வாரியத்துறை ஊழியர்கள் சிலர் டிரான்ஸ்பார்மர் அமைப்பதற்காக பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு சொந்தமான நிலத்திற்குள் மின்கம்பங்களை நட்டனர். இது குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பள்ளிவாசல் நிர்வாகத்தின் தலைவரான ரகுமத்துலா நியாயம் கேட்டதற்கு பணியில் ஈடுபட்டிருந்த மின்ஊழியர்கள் பள்ளிவாசல் நிர்வாகியை தரக்குறைவாக பேசி, மிரட்டியுள்ளனர்.