கல்லூரி பட்டமளிப்பு விழா

கீழக்கரை, மார்ச் 4: முத்துப்பேட்டை கவுசானல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 11வது பட்டமளிப்பு விழாவும், 15 ஆண்டு கல்லூரி விழாவும் நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவிற்கு இருதய சபையின் தலைவர் வேளாங்கண்ணி தலைமை வகித்தார். பொது செயலாளர் கஸ்பார், புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஞானபிரகாசம் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ஹேமலதா வரவேற்றார்.

சிறப்பு விருந்தினரான அழகப்பா பல்கலை கழக மண்பமை துணை வேந்தர் ராஜேந்திரன் 297 இளங்கலை மற்றும் 53 முதுகலை மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். 15வது ஆண்டு விழாவில் கல்லூரி செயலாளர் சூசை அடைக்கலம் தலைமை வகித்தார். முதல்வர் ஹேமலதா விழாவினை தொடங்கி வைத்தார். விழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. துணை முதல்வர் மஹரிபிரகாஷ் நன்றி கூறினார்.

Related Stories: