டிராக்டர் மோதி ராணுவ வீரர் பலி

திருவாடானை, மார்ச் 4: திருவாடானையில் இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதியதில் முன்னாள் ராணுவ வீரர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

திருவாடானை அருகே உள்ள நெய்வயல் கிராமத்தை சேர்ந்தவர் சேது முத்தையா (70). முன்னாள் ராணுவ வீரர். இவர் திருவாடானை வேளாண்மை அலுவலகத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது வேளாண்மை அலுவலகம் அருகில் சென்றபோது பின்னால் வந்த டிராக்டர் மோதியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே சேது முத்தையா உடல் நசுங்கி பலியானார். இதுகுறித்து திருவாடானை போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டர் டிரைவர் சின்ன கீர மங்கலத்தைச் சேர்ந்த கார்த்திகை நாதனை தேடி வருகின்றனர்.

Related Stories: