திருவள்ளூர், மார்ச் 3: திருவள்ளூர் அருகே வெள்ளாத்துக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலை பள்ளியில், மாணவர்களை தரம்பிரித்து பாடம் நடத்தும் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பெற்றோர்கள் குழந்தைகளை அனுப்பாமல் பள்ளியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்டது வெள்ளாத்துக்கோட்டை கிராமம். இக்கிராமத்தில் அரசு நடுநிலை பள்ளி இயங்கிவருகிறது. ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில், 52 மாணவ, மாணவியர்கள் கல்வி பயில்கின்றனர். இப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை ஈஸ்வரி தேவி என்பவர், மாணவர்களை தரம்பிரித்து உட்காரவைத்து, பாடம் நடத்துவதாக கூறப்படுகிறது, இதுகுறித்து, மாணவர்கள் தங்களது பெற்றோர்களிடம் கூறியுள்ளனர்.