பெரம்பலூர்,மார்ச் 3: மூடப்படாத ஆழ்குழாய்க் கிணறுக ளில் தவறிவிழுந்தக் குழந் தைகளை மீட்பதற்கு 2 கரு விகளைக் கண்டுபிடித்துள்ளேன்.காப்புரிமை பெற்றுத் தாருங்கள் என பெரம்பலூர் கலெக்டரிடம் ஐடிஐ முடித்த எலக்ட்ரீஷியன் கோரிக்கை விடுத்துள்ளார். பெரம்பலூர் கலெக்டர் அலுவலக குறை தீர்க்கும் கூட்ட அரங்கத்தில், பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் சாந்தா தலைமையில் நடைபெற் றது. மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். இதில்ஆலத்தூர் தாலுகா, கீழமாத்தூர், வடக்குத் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் வெங்கடாசலம் (56) என்பவர் அளித்தக் கோரிக்கை மனுவில் தெரி வித்திருப்பதாவது :நான் தற்போது ஆலத்தூர் தாலுகா, கீழமாத்தூர் கிராமத்தில் தங்கி இருக்கிறேன். ஐடிஐ படித்துள்ள நான் எலக்ட்ரீஷியனாக வேலைபார்த்து வருகி றேன்.