சேலம், மார்ச் 2:சேலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் இணைத் தலைவரும், சென்ட்ரல் சட்டக் கல்லூரி செயலாளரும் மற்றும் அங்கீகாரம் பெற்ற சமரச தீர்வு வல்லுனருமான வழக்கறிஞர் சரவணன் ஏற்பாட்டின் பேரில், கொண்டப்பநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே பெண்களுக்கான பாதுகாப்பு பற்றி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் சென்ட்ரல் சட்டக்கல்லூரி மாணவர்கள் வீதி நாடகம் நடித்து காட்டினர். இதில் பெண்களுக்கு சமூகத்தில் ஏற்படும் பாலியல் ரீதியான வன்முறைகள் பற்றி விளக்கப்பட்டது.