ஊட்டி,பிப்.28: நீலகிரி மாவட்டத்தில் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில், மோர், ஜூஸ், நொங்கு மற்றும் குளிர்பானங்களை நாடி பொதுமக்கள் செல்வதால் இவைகளின் விற்பனை அதிகரித்துள்ளது. மலை மாவட்டமான நீலகிரியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் கோடை காலத்தில் கூட குளிர் வாட்டியெடுக்கும். ஆண்டுக்கு 12 மாதங்களும் பொதுமக்கள் ஸ்வெட்டர், சால்வை மற்றும் தொப்பி போன்ற வெம்மை ஆடைகளை அணிந்தே வெளியில் வருவார்கள். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நீலகிரி காலநிலையில் மாற்றம் ஏற்ட்டுள்ளது. மார்ச் மாதம் துவங்கிவிட்டால், சமவெளிப் பகுதிகளை போன்று வெயில் அதிகமாக காணப்படும். ஆனால், இம்முறை கடந்த வாரம் முதலே வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக காணப்படுகிறது. ஊட்டியில் மாலை நேரங்களில் ஓரளவு குளிர் இருந்தாலும், மாவட்டத்தின் பிறப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. ஊட்டியிலேயே ஒரு சில வீடுகளில் தற்போது பேன் போன்றவைகளை பயன்படுத்த துவங்கவிட்டனர். இது ஒரு புறம் இருக்க ஊட்டியில் மோர் மற்றும் ஜூஸ் போன்ற குளிர்பானங்களை குடிக்க மக்கள் தயக்கம் காட்டுவார்கள். காரணம், எப்போதுமே குளிரான காலநிலை இருக்கும் என்பதால், எளிதில் சளி அல்ல காய்ச்சல் தொற்றிக்கொள்ளும். ஆனால்.