மக்கள் தொடர்பு திட்ட முகாம் சார் ஆட்சியர் பங்கேற்பு

திருவாடானை, பிப். 28:  திருவாடானை அருகே மச்சூரில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. இதில் சார் ஆட்சியர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திருவாடானை தாலுகா பில்லூர் உள்வட்டம் மச்சூரில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. இதில் சார் ஆட்சியர் சுக புத்ரா தலைமை வகித்தார். முகாமில் முதியோர் ஓய்வூதிய திட்டம், சாலை வசதி கேட்டல், பட்டா மாறுதல் என பல்வேறு வகையான கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனர். மொத்தம் 130 மனுக்கள் பெறப்பட்டது. இதில் சார் ஆட்சியர் 25 பயனாளிகளுக்கு முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உத்தரவுகளை வழங்கினார். மேலும் வேளாண்மை துறை தோட்டக்கலை துறை போன்றவற்றின் மூலம் பயனாளிகளுக்கு மானிய உதவித் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் திருவாடானை தாசில்தார் சேகர், ஒன்றிய பெருந்தலைவர் முகம்மது முக்தார், மண்டல துணை வட்டாட்சியர் சேதுராமன் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related Stories: