கொடைக்கானல், பிப். 28: கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் உயிர் தொழில்நுட்பவியல் துறை சார்பில் மலைவாழ் கிராம பெண்களுக்கு காளான் வளர்ப்பு பயிற்சி முகாம் துவங்கியது. துறை தலைவர் உஷா ராஜநந்தினி வரவேற்றார். கோவை வேளாண் பல்கலைக்கழக முன்னாள் தாவர நோயியல் துறை தலைவர் பிரகாசம் கலந்து கொண்டு காளான் வளர்ப்பில் தொழில்நுட்பம் பற்றிய பயிற்சிகளை மலைவாழ் கிராம பெண்களுக்கு வழங்கினார். 3 நாட்கள் நடக்கும் இம்முகாமில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர்.