கடைசி நாள் என அறிவித்ததால் விவசாய கடன் அட்டை பெற அலைமோதிய விவசாயிகள் கூட்டம்

கந்தர்வகோட்டை, பிப்.28: மத்திய அரசு ஏழ்மையான சிறு விவசாயிகளுக்கு விவசாய கடன் அட்டை மூலம் உதவிகள் வழங்கி வருகிறது. எனவே அந்த அட்டையை பெற நேற்று கடைசி நாள் என வதந்தி பரவியதால் கந்தர்வகோட்டை வேளாண்மை விரிவாக்க மையத்தை நோக்கி நேற்று விவசாயிகள் படையெடுத்த வண்ணம் இருந்தனர். ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் விண்ணப்பங்களுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து விவசாய அலுவலக அதிகாரியிடம் கேட்டதற்கு ஒரு முடிவு தேதி அறிவித்தால்தான் விவசாயிகள் அக்கறை காட்டுவார்கள் என நாங்களே நேற்று கடைசி தேதி என அறிவிப்பு செய்திருந்தோம். அப்படி ஒன்றும் கடைசி தேதி இல்லை. அதன் பின்னர் கொடுத்தாலும் விவசாயிகளை சேர்ப்போம் என்றார்.

Related Stories: