விராலிமலை, பிப்.27: விராலிமலை அருகே தனியார் கல்லூரி பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிய விபத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் 5 பேர் உட்பட 6 பேர் காயம் அடைந்தனர். விராலிமலை அருகே திருச்சி சாலையில் உள்ள தனியார் கல்லூரி பேருந்து அன்னவாசலுக்கும். துவரங்குறிசிக்கும் ஒன்றன் பின் ஒன்றாக மதுரை சாலையில் சென்று கொண்டிருந்தது. முன்னாள் சென்ற துவரங்குறிச்சி பேருந்து விராலிமலைக்கு செல்ல திரும்பியபோது அன்னவாசல் செல்ல பின்னால் வந்த பேருந்து மோதியது.