பெரம்பலூர், பிப். 27: கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் தவக்காலம் நேற்று(26ம் தேதி) தொடங்கியது. சாம்பல் புதன் கிழமையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு திருப்பலி நடந்தது.உலகெங்கும் வாழும் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கிறிஸ்துமஸ் பண்டிகையாகக் கொண்டாடுவதுபோல், இயேசு கிறி ஸ்துவின் இறப்பு நாளான பெரிய வெள்ளியை, “குட் பிரைடே” என கடைப்பிடித் தும், இயேசு உயிர்த்து எழுந்ததை ஈஸ்டர் பண்டிகையாகக் கொண்டாடியும் வருகி ன்றனர்.இதனையொட்டி இயேசுகி றிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டதன் நினைவாக 40 நாட்கள் விரதமிருந்து தவக்கால மாக அனுசரித்து வருகின்றனர். இந்தத் தவக்காலம் நேற்று (26ம் தேதி) புதன்கிழமை சாம்பல் புதன் என்ற பெய ரில் தொடங்கியது.இதனை த் தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிலுவைப்பாடு நிகழ்ச்சி கள் நடத்தப்படுகிறது.தவக் காலத்தின் நிறைவாக ஏப்ரல் மாதம் 9ம்தேதி பெரிய வியாழனும், 10ம் தேதி புனி த வெள்ளியும் உலகெங்கு ம் அனுசரிக்கப்படுகிறது. 12ம் தேதி இயேசு உயிர்த்த ஈஸ்டர் பண்டிகை கொண் டாடப்படுகிறது.