கமுதி, பிப். 27: கமுதி அருகே மாசிக் களரி திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.கமுதி அருகே முஷ்டகுறிச்சி கிராமத்தில் 17வது மாசிக் களரி திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. 3 பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் 30 மாட்டு வண்டிகள் ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து கலந்து கொண்டன.