பழநி, பிப். 27: தீ விபத்தை தடுக்கும் பொருட்டு பழநி வனப்பகுதியில் வெளியாட்கள் நுழைய தடை விதித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேற்குதொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பழநி வனப்பகுதி சுமார் 18 ஆயிரம் ஹெக்டேர் பரப்பு கொண்டது. இங்கு யானை, சிறுத்தை, வரிப்புலி, காட்டெருமை, காட்டுப்பன்றி, மான், கேளையாடு போன்ற அரிய வகை விலங்கினங்களும், சந்தனம், தேக்கு, ஈட்டி உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்களும், அரிய வகை மூலிகை செடிகளும் உள்ளன. ஆண்டுதோறும் கடும் வெயிலின் காரணமாக வனப்பகுதிகளில் தீ விபத்து ஏற்படுவது வழக்கம். தற்போது வெயில் கொளுத்த துவங்கி உள்ளது. இதன் காரணமாக வனப்பகுதிகளில் செய்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது,