பழநியில் திமுக கூட்டணியினரின் தேர்தல் பணிகளை எம்எல்ஏ ஆய்வு

 

பழநி, ஏப். 20: திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் வேட்பாளராக களமிறக்கப்பட்டார். பழநி சட்டமன்ற தொகுதியில் 323 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்தது. வாக்குச்சாவடிகளின் 200 மீட்டருக்கு அப்பால் திமுக கூட்டணி சார்பில் தற்காலிக அலுவலகம் அமைக்கப்பட்டு தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இப்பணிகளை ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாக்காளர்களின் மனநிலை, வாக்குச்சாவடிக்குள் அமர்ந்திருக்கும் திமுக கூட்டணி பூத் ஏஜெண்டுகளின் செயல்பாடு தொடர்பாக கேட்டறிந்தார். 20க்கும் மேற்பட்ட இடங்களுக்கு சென்று கட்சியினரை உற்சாகமூட்டினார். ஆய்வின் போது மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன், நகர செயலாளர் வேலுமணி ஆகியோர் உடனிருந்தனர்.

The post பழநியில் திமுக கூட்டணியினரின் தேர்தல் பணிகளை எம்எல்ஏ ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: