திருச்செங்கோட்டில் 25 லட்சத்திற்கு எள், பருத்தி விற்பனை

திருச்செங்கோடு, பிப்.26: திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுவிற்பனைச் சங்கத்தில் வாராந்திர எள் ஏலம் நடைபெற்றது. இதில், விவசாயிகள் 210 மூட்டை எள்ளை விற்பனைக்கு வந்தனர். சுமார் 30 வியாபாரிகள் வந்திருந்தனர். ரகசியடெண்டர் முறையில் நடந்த ஏலத்தில் 16 லட்சத்திற்கு எள் விற்பனையானது. சிவப்பு ரகம் கிலோ 86 முதல் 121வரையிலும், கருப்பு ரகம் 87.60 முதல் 123.60 வரையிலும் ஏலம் போனது. வெள்ளை ரகம் கிலோ 87.10 முதல் 124.80 வரையிலும் விற்பனையானது.இதேபோல், பருத்தி 420 மூட்டை 9 லட்சத்திற்கு விற்பனையானது. பருத்திரகங்களை முசிறி புதுப்பட்டி, வடக்கு நல்லியம்பட்டி, தெற்குநல்லியம்பட்டி, தண்டலை, திருத்தலையூர், ராசிபுரம்,கதிராநல்லூர், புதுச்சத்திரம், துறையூர், அம்மம்பாளையம், மருவத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து விவசாயிகள் பருத்தியை கொண்டு வந்தனர். பிடி ரகம் குவிண்டால் 4690 முதல் 5560 வரையிலும் விலை போனது.

Related Stories: