கும்மிடிப்பூண்டி, பிப். 26: பழவேற்காட்டில் நேற்று முன்தினம் மீட்கப்பட்ட பெண் சடலங்கள், தாய், மகள் என்று அடையாளம் தெரிந்தது. அவர்கள் தற்கொலை செய்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் ஊராட்சி, கொக்குபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவி (49). இவரது மனைவி வீரம்மாள். இவர்களுக்கு பாலமுரளி, தேவயானி என மகன், மகள் உள்ளனர்.
இவர்களுக்கும் அதே பகுதியில் வசிக்கும் உறவினர் சிவா என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன் நிலத்தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து கடந்த 20 ம் தேதி ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் தனித்தனியாக புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்த விசாரித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் ரவி, தனது மனைவி மற்றும் மகள், மகனுடன் கோயிலுக்கு சென்றுவருவதாக உறவினர்களிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன்பிறகு அவர்கள் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் அவர்களை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.