வாலாஜாபாத், பிப். 26: வாலாஜாபாத் பேரூராட்சி 13வது வார்டில் பயன்பாடின்றி கிடக்கும் ரேஷன்கடை கட்டிடத்ைத உடனடியாக திறந்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. வாலாஜாபாத் பேரூராட்சியின் 15 வார்டுகளில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அனைத்து வார்டுகளிலும் ரேஷன்கடைகள் செயல்படுகின்றன. ஆனால், 13வது வார்டு முன்சிப் நாராயணசாமி தெருவில் கடந்த 2014-15ம் ஆண்டு எம்எல்ஏ பொது நிதியில் இருந்து ₹7.20 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய ரேஷன்கடை கட்டி முடித்து, திறப்பு விழா நடத்தப்பட்டது. ஆனால், அதன்பிறகு, இதுவரை அந்த ரேஷன்கடை கட்டிடத்தை திறக்காமல், கிடப்பில் வைத்துள்ளனர்.