மாவட்ட அளவிலான தடகள போட்டி சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற அரசு பள்ளி மாணவிகள்

சத்தியமங்கலம், பிப். 26: ஈரோடு மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் கோபி கலை அறிவியல் கல்லூரியில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர். இதில் அனைத்து போட்டிகளிலும் கலந்துகொண்ட சத்தியமங்கலம் அரசு மகளிர் பள்ளியை சேர்ந்த மாணவிகள் 22 பதக்கங்கள் பெற்று மாவட்ட அளவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பள்ளி தலைமை ஆசிரியை ஷீலா ராணி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Related Stories: