பெரம்பலூர்,பிப்.26:பெரம்பலூர் பழைய பஸ்டாண்டில் செய்தி மக்கள் தொடர்புத் துறை மூலம் நடத்தப்பட்ட சிறப்பு புகைப்படக் கண்கா ட்சியை கலெக்டர் மற்றும் எம்எல்ஏக்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தமிழக அரசின் மூன்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மூலம் பெரம்பலூர் பழைய பஸ் டாண்டு பகுதியில் சிறப்பு புகைப்பட கண்காட்சியை நடத்தப்பட்டது. இக்கண்காட்சியை பெர ம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா திறந்து வைத்தார். நிகழ்ச்சியின்போது பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ தமிழ்ச் செல்வன், குன்னம் சட்டமன்றத் தொ குதி எம்எல்ஏ ராம ச்சந்திரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.