தஞ்சை, பிப். 25: ஊதியம் வழங்ககோரி தஞ்சையில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்தாண்டு ஜனவரி மாத சம ஊதியம் வழங்க வேண்டும். மாதம்தோறும் உரிய தேதியில் ஊதியம் வழங்க வேண்டும். 4ஜி அலைகற்றை சேவையை உடனே துவங்க வேண்டும். பிடித்தம் செய்யப்பட்ட நிலுவை தொகையை செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மேரீஸ் கார்னர் பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் என்எப்டிஇ உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.