கரூர், பிப்.25: கரூர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிபாக்கியை உடனே செலுத்த வேண்டும் என ஆணையர் தெரிவித்துள்ளார். கரூர் நகராட்சி ஆணையர் சுதா விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கரூர் நகராட்சியில் 48வார்டுகளிலும் உள்ள மக்களுக்கு தேவையான குடிநீர்வசதி, வடிகால்வசதி, சாலைகள், சுகாதாரவசதி, தெருவிளக்குகள்போன்ற பல அத்தியாவசியமான பணிகள் நகராட்சியால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணிகள் யாவும் தடையின்றி மக்களுக்கு கிடைத்திட, நகராட்சிக்கு செலுத்தவேண்டிய வரி, காலியிடவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், பாதாளா சாக்கடை கட்டணம், கடை வாடகை ஆகியவற்றுக்கான தொகையனை நகராட்சி வரிவசூல் மையத்தில் நிலுவையின்றி செலுத்த வேண்டும்.