ஆர்.எஸ்.மங்கலம், பிப்.25: திருப்பாலைக்குடியில் அனுமதியின்றி கண்மாய் ஒடை பகுதியில் மணல் திருடியவர்கள் மீது போலீசார் வழக்கு விசாரித்து வருகின்றனர். ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் மணல் திருட்டில் ஈடுபடுபவர்களை தாசில்தார் தலைமையில் வருவாய் துறையினரும், போலீசாரும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பாலைக்குடி கண்மாய் வரத்து கால் ஓடைப்பகுதியில் மர்ம நபர்கள் மணல் திருட்டில் ஈடுபட்டிருப்பதாக விஏஓ மற்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்தபோது கண்மாய் வரத்துக் கால்வாய் பகுதியில் டிராக்டரில் மணல் திருடுவது தெரிய வந்தது.